இந்திய அணி T20 உலக கோப்பையில் வெல்வதே எனது ஆசை என முன்னாள் வீரர் முகமது கையிப் தெரிவித்துள்ளார்.
முகமது கையிப்
இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு பயிற்சி பெறும் விதமாக தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக தென்னாபிரிக்க அணியுடனும் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கையிப் தனது மனதில் உள்ள சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அதாவது ஆசிய கோப்பை தொடரில் இந்தியா தோல்வி அடைந்து 8 வது முறையாக பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த தோல்வியை சரி செய்யும் விதமாக உலக கோப்பை தொடரில் இந்திய வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் ஏகபோக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் இந்திய அணியில் சில முக்கிய வீரர்கள் பார்முக்கு திரும்பி உள்ளார்கள்.
T20 உலக கோப்பை.., ஸ்பெஷல் கோரிக்கை வைத்த டிராவிட்.., பச்சை கொடி காட்டிய BCCI!!
எனவே இந்த வீரர்களை கொண்டு உலக கோப்பை தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடுவார்கள் என நினைக்கிறேன். மேலும் இந்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று பட்டத்தை வெல்வதே எனது ஆசை என முகமது கையிப் கூறியுள்ளார். எனவே அனைவரது எதிர்பார்ப்பையும் இந்திய வீரர்கள் நிறைவேற்றுவார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.