டி20 உலகக்கோப்பை தொடருக்காக ராகுல் வைத்த கோரிக்கைக்கு தற்போது BCCI அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பயிற்சியாளர் ராகுல் உற்சாகத்தில் உள்ளார்.
T20 உலக கோப்பை
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான T20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணி அடுத்த T 20 போட்டியில் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்தியா உலக கோப்பை தொடருக்காக அக்டோபர் 11ஆம் தேதி ஆஸ்திரேலியா புறப்பட இருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடர் குறித்து BCCI யிடம் ராகுல் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அதாவது உலக கோப்பை தொடருக்கு பயிற்சி பெற அக்டோபர் 5 ஆம் தேதியே ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும். மேலும் அங்கு பயிற்சி பெரும் மைதாங்கள் அனைத்தும் பெர்த் மைதானமாக இருக்க வேண்டும் என BCCI யிடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கைக்கு தற்போது BCCI ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
IND VS AUS 2 T20.., நாக்பூரில் மிரட்டும் மழை.., வெளியாகிய பிட்ச் ரிப்போர்ட்!!!
இதனால் இந்திய அணி அக்டோபர் 5 ஆம் தேதியே ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட உள்ளனர். இவர்களுடன் இணைந்து பேக் அப் வீரர்களும் ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர். மேலும் இந்த பெர்த் மைதானத்தில் பயிற்சி பெற்றால் தான் வீர்ரகளுக்கு நல்ல வேகமும், பவுன்சும் கிடைக்கும் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் உங்களிடம் ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிஷிங் சரி இல்லை என விமர்சனம் செய்து வருகின்றனர்.