புகழ்பெற்ற நடிகையாக திகழும் அமலா பால் கடந்த சில மாதங்களாக தன் நண்பரால் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளார். போலீசார் அந்த நபரை தற்போது கைது செய்துள்ளது.
நடிகை அமலா பால்:
மைனா, தலைவா போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை அமலா பால். தொடர்ந்து டாப் நடிகையாக இருக்கும் போது இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்தார். ஆனால் அது இவரின் மார்க்கெட்டில் எந்த ஒரு சறுக்கலையும் ஏற்படுத்தவில்லை.
தற்போது வரை கோலிவுட், டோலிவுட் என வெற்றிநடை போட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை அமலா பால்லை துன்புறுத்திய குற்றத்திற்காக அவருடைய நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான பவ்நிந்தர் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள வீட்டில் நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லையை அவர் கொடுத்துள்ளார். மேலும் அமலா பாலின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். நடிகை அமலாபால் அளித்த புகாரின் பேரில் ஜெய்ப்பூரை சேர்ந்த பவ்நிந்தர் சிங்கை விழுப்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.