புதிய விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூரில் வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
சீமான் எதிரொலி:
தமிழகத்தில் உள்ள சென்னையில் உள்ள விமான நிலையத்தை புதுபித்தாக சில தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக பெரிய விமான நிலையத்தை அமைக்க இடத்தை தேடும் போது பரந்தூரில் உள்ள விளைநிலங்கள் அதிகம் காணப்படும் நிலப்பரப்பை தேர்வு செய்துள்ளது. இதற்கு மக்கள் பெரும் கண்டனம் தெரிவித்தனர்.
அதாவது 3000 ஏக்கர் விளை நிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து விமான நிலையம் அமைக்க வேண்டுமா என்று மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – முன் பருவத்தேர்வு நடத்த ஏற்பாடு!
அதாவது, விமான நிலையம் தற்போது மக்களுக்கு அவசியமானதா, அதுவும் உணவு தரும் விளைநிலங்கள் மற்றும் தவித்த வாய்க்கு தண்ணீர் தரும் நீர் நிலையங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?? உள்ள விமான நிலையத்தை புதுப்பித்தாலே போதுமே, இப்படி மக்களை கஷ்டப்படுத்தி ஏதற்காக இதை கட்ட வேண்டும்.
அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிய கட்டாயம் இருந்தால் தரிசு நிலங்களையோ, மக்கள் வகிக்காத இடங்களிலோ புதிய விமான நிலையத்தை உருவாக்குங்கள் என்று கூறியுள்ளார். மேலும் இந்த புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்