தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் வைத்து 1200 கிமீ தூரம் ஓட்டி சொந்த ஊருக்கு அழைத்து வந்த மகளை அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் பாராட்டி உள்ளார்.
10 நாட்களில் 1200 கிமீ:
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பேருந்து மற்றும் ரயில்கள் ஓடாத நிலையில் காயமுற்ற தனது தந்தையை அரியானாவில் இருந்து சைக்கிளில் அமர வைத்து சொந்த ஊரான பீகாருக்கு 1200 கிமீ பெடல் செய்து அழைத்து வந்துள்ளார் அவரது மகள் ஜோதி குமாரி என்கிற சிறுமி. இந்த செய்தி வெளியாகி பெரும் வைரலான நிலையில் இந்திய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு அவரை நேரில் பயிற்சிக்காக அழைத்து உள்ளது.
தேசிய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பின் தலைவர் ஓங்கர் சிங், சிறுமி ஜோதி குமாரி 1200 கிமீ சைக்கிள் ஓட்டிய செய்தியை அறிந்து ஊரடங்கு முடிந்தவுடன் டெல்லிக்கு பயிற்சிக்காக அழைத்து உள்ளார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோதி குமாரியை பாராட்டி உள்ளார்.
சகிப்புத்தன்மை மற்றும் அன்பின் அழகான கால்களின் சாதனை இந்திய மக்களின் கற்பனையையும் சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பையும் ஈர்த்துள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |