நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு பயிற்சிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட செயலியை 72 மணிநேரத்தில் 2 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்து உள்ளார்.
நுழைவுத் தேர்வு:
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (நீட்), பொறியியல் நுழைவுத் தேர்வு (ஜேஇஇ – முதன்மைத் தேர்வு) ஆகியவற்றிற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் தேசிய சோதனை நிறுவனம் (என்டிஏ) சார்பில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட தேசிய அப்யாஸ் செயலி மாணவர்களுக்கு அதிகளவில் பயன்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்து உள்ளார்.
இதனால் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட 72 மணிநேரத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவிறக்கம் செய்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மாதிரித் தேர்வில் கலந்து கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் பல மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில் பணம் செலுத்தி படிக்கும் அளவிற்கு வசதி இல்லாமல் உள்ளனர். அவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில் கொண்டு என்டிஏ இந்த செயலியை உருவாக்கி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |