ரூ. 5,400 கோடி கடனை சீன வங்கிகளிடம் செலுத்துங்கள் – அனில் அம்பானிக்கு பிரிட்டன் கோர்ட் உத்தரவு..!

0

சீன நாட்டு வங்கிகளிடம் வாங்கிய கடன் தொகைக்காக ரூ. 5,400 கோடியை 21 நாட்களுக்குள் செலுத்துமாறு ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அனில் அம்பானி:

கடந்த 2012ம் ஆண்டு அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்கள் மும்பையில் செய்லபடும் சீனாவைச் சேர்ந்த தொழில் மற்றும் வர்த்தக வங்கியில் ரூ. 7000 கோடி கடன் பெற்றன. இந்த கடன் தொகை திருப்பி செலுத்தப்படாத காரணத்தால் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடன்கள் பெறுவதற்கு அனில் அம்பானி உத்தரவாதம் வழங்கியதாக கூறி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பிரிட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் கடனுக்கு ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கும் பொறுப்பு என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனால் சீன வங்கிகளிடம் பெற்ற 717 மில்லியன் டாலர் தொகையை (ரூ. 5,400 கோடி) 21 நாட்களுக்குள் திருப்பி செலுத்துமாறு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த தீர்ப்பு அனில் அம்பானியை கட்டுப்படுத்தாது எனவும் ரிலையன்ஸ் எரிசக்தி மற்றும் ரிலையன்ஸ் முதலீடு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என ரிலையன்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here