பாக்கியலட்சுமி தொடரில் தற்போது யாரும் பாக்கியா சமைத்த உணவையும் மசாலாவையும் வாங்க மறுத்து விடுகின்றனர். இதனால் பாக்கியா மற்றும் செல்வி சமைத்த உணவை வீட்டுக்கே கொண்டு வந்து விடுகின்றனர். பிறகு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது செல்வியை பாக்கியா, நாளைக்கு வீட்டுக்கு முதலில் வா.. பிறகு ஆபீஸ்ஸுக்கு செல்லலாம் என கூறுகிறார்.
இதனால் கோவமான கோபி, நான் சமையல் பிஸினஸ் வேண்டாம் என சொல்லியும் நீ இன்னும் அதை செஞ்சுகிட்டு இருக்கியா.. இனிமே என்கிட்ட பேசாத உனக்கும் என சண்டை போட்டு விட்டு மேலே சென்று விடுகிறார். கூடவே செழியனும் இனியாவும் சமையல் பிசினஸ் வேண்டாம் என்று பாக்கியாவிடம் கூறுகின்றனர். மறுநாள் காலையில் பாக்கியா கோபிக்கு காப்பி எடுத்துக்கொண்டு பாக்கியா செல்ல அவர் என்னிடம் பேசாதே என சத்தம் போட்டுவிட்டு சென்று விடுகிறார்.
எனவே அழுது கொண்டே பாக்கியா தன்னுடைய பிசினஸை விட முடிவு செய்து பொருட்களை வீட்டிற்கு எடுத்து வருகிறார். பின்னர் ராதிகா பாக்கியாவை சந்தித்து மன்னிப்பு கேக்கிறார். அப்போது பாக்கியா சமையல் பிசினஸை நிறுத்தியதை கூற ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இந்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்படவுள்ளன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்