தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமாகி பின்பு பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட இவர் இன்று தனது 33வது வயதை கொண்டாடுகிறார்.
திரைப்பயணம்:
சமந்தா தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமாகினார். அந்த படத்தின் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஆனால் தமிழில் சமந்தாவிற்கு பெயர் வாங்கித் தந்த திரைப்படம் நான் ஈ தான். அந்த படத்தில் சமந்தாவின் அழகு, ஈயை காதலிக்கும் நடிப்பு பலராலும் அதிகமாக பேசப்பட்டது. அதன் பின்னர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜீவா உடன் நடித்த ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்திற்காக பிலிம்பேர் விருது பெற்றார்.
அதன் பின்னர் சூர்யாவுடன் அஞ்சான், விஜயுடன் கத்தி, தெறி & மெர்சல் என வரிசையாக வெற்றிப் படங்களில் நடித்து புகழ் பெற்றார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சினிமாவில் நீடித்து வருகிறார். தனது அழகால் ரசிகர்கள் மனதையும் கட்டுக்குள் வைத்துள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன்தாரா உடன் நடிக்க உள்ளார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்:
கொரோனா பாதிப்பால் சமந்தா தனது பிறந்தநாளை பெரிதாக கொண்டாடவில்லை. தனது வீட்டிலேயே காதல் கணவர் நாகசைதன்யா தயார் செய்த கேக் வெட்டி எளிய முறையில் கொண்டாடினார். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #HappyBirthdaySamantha என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |