தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து செய்தி பலரையும் வருத்தப்பட செய்தது. தற்போது தனுஷின் தந்தை இருவரும் விவாகரத்து பெறவில்லை. கூடிய விரைவில் இருவரும் இணைந்து விடுவார்கள் என கூறியுள்ளார். இந்த செய்தி ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா
2004ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக செய்திகள் வெளியாகியது. 19 ஆண்டு கால சுமூகமான குடும்ப வாழ்க்கைக்கு பிறகு இத்தகைய முடிவை எடுத்துள்ளனர். எதனால் இருவரும் விவாகரத்து பெறவுள்ளனர் என பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வந்தனர். பல திரை பிரபலங்களும் இந்த விவாகரத்து முடிவை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுரை கூறினர்.
ரஜினியும் இவர்களின் பிரிவை குறித்து மிகவும் வருந்தினார். ரசிகர்கள் ரஜினிக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி அவரை தேற்றி வந்தனர். இப்படி பரபரப்பாக விவாகரத்து குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு ஆறுதலான செய்தி வெளியாகியுள்ளது.
தனுஷின் தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜா இருவரும் விவாகரத்து பெறவில்லை என கூறியுள்ளார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகவே பிரிய முடிவெடுத்துள்ளனர். விரைவில் இந்த பிரச்சனை சரியாகிவிடும். கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூறியுள்ளார். இந்த செய்தியால் ரசிகர்கள் பலரும் நிம்மதியடைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்