இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்த, 20க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
சேனல்கள் முடக்கம்:
மக்களால் அதிகம் விரும்பப்படும் சமூக வலை தளங்களில் ஒன்று யூடியூப். கடந்த, டிசம்பர் 21 அன்று மத்திய அரசு 20க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையத்தை முடக்கியதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்த சமூக வலை தளங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாகவும், பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சேனல்கள் அனைத்தும் பாகிஸ்தானிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த யூடியூப் தளத்தை 35 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பின்பற்றி வந்ததாகவும், 55 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற, சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அனைத்து சமூக வலைதளங்களும் முடக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்