கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட திரிஷா தற்போது தொற்றில் இருந்து மீண்டு வந்த செய்தியை தனது ரசிகர்களுக்கு இன்ஸ்டகிராம் வலை பக்கத்தில் தெரிவுபடுத்தியுள்ளார். தொற்றில் இருந்து மீண்ட கையோடு பட வேலைகளையும் கவனிக்க சென்றுவிட்டார்.
கொரோனா தொற்றிலிருந்து மீண்ட திரிஷா
புத்தாண்டுக்கு முன்பாக நடிகை திரிஷா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். அந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார். தற்போது கொரோனா தொற்றில் இருந்து பூரண நலம் பெற்ற செய்தியையும் ஒரு செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவுபடுத்தியுள்ளார். கடுமையான நாட்களில் இருந்து மீண்டு வந்துள்ளேன். கொரோனா தடுப்பூசியின் உதவியுடன் தான் என்னால் மீண்டு வர முடிந்தது.
அனைவரும் கண்டிக்காக கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொள்ளுங்கள். விழிப்புடன் செயல்படுங்கள் . நான் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர வேண்டிய அனைத்து ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி. ரிப்போர்ட்டில் ”நெகடிவ்” என இருப்பதை பார்த்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது என கூறியுள்ளார். கொரோனா தொற்றில் இருந்து மீண்ட கையோடு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். தற்போது திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்