தமிழ், தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின் ஆக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழில் தன் கேரியரை ஸ்டார்ட் செய்தாலும் இவருக்கு பல ஹிட் படங்களை வாரி வழங்கியது டோலிவுட் தான். அங்கு பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 3 வருடங்கள் நன்றாக சென்றுகொண்டிருந்த திருமண வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது போல் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. சமந்தா திரையில் காட்டும் கவர்ச்சியும், தி பேமிலி மேன் 2 தொடரில் இவர் நடித்ததும் அவரின் குடும்பத்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.
இதனால் இவர்களுக்குள் பிரச்சனை என்று சினி வட்டாரத்தில் பேசப்பட்டது. தற்போது அது உண்மையாகியுள்ளது. அவர்கள் இருவரும் பிரியப்போவதாக சமந்தாவும், நாக சைதன்யாவும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். இது அவர்களின் கோடான கோடி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்