நாம் இந்த புரட்டாசி ஸ்பெஷல் பதிவில் இது வரை பல நைவேத்திய உணவு வகைகளை பார்த்தும் செய்தும் வருகிறோம். அந்த வகையில் தற்போது மிகவும் சிம்பிளாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யக்கூடிய பருப்பு பூரண போளி செய்முறையை காண்போம்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 1 கப்
மைதா மாவு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
வெல்லம் – 1/2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் மைதா மாவு,உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து அதை 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதன் பின்னர் நன்கு கழுவி வைத்து உள்ள கடலை பருப்பை ஒரு குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் அளவுக்கு வேக விட வேண்டும். அது வெந்து வந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து ஒரு உருண்டை பிடிக்கும் அளவுக்கு வந்தவுடன் அதில் ஏலக்காயை இடித்து போடவும்.
அதன் பின்னர் பிசைந்து வைத்து உள்ள சப்பாத்தி மாவை சின்ன சப்பாத்தியாக தேய்த்து கொண்டு அதில் சிறிது பூரணம் வைத்து மறுபடியும் உருண்டையாக மடித்து கொண்டு மீண்டும் சப்பாத்தியாக போட்டு கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதை தோசை கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி பதமாக சுட்டு எடுத்து கொள்ளவும். தற்போது சுவையான பருப்பு போளி ரெடி.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்