மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன்களில் தற்போது DRINIK என்ற புதிய வகை மால்வேர் போனில் ஊடுருவி வங்கி உள்ளிட்ட சுய விவரங்களை திருடுவதாக மத்திய அரசின் CECRT-in எச்சரிக்கை விடுத்துள்ளது.
தகவல் திருட்டு :
சமீப காலமாக ஆண்ட்ராய்டு போன்களில் புதிய வகை வைரஸ்கள் ஊடுருவி அதன் பயனர்களின் சுய விவரங்களை ஹேக்கர்கள் கொண்டு முடக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இது பற்றி மத்திய அரசின் CECRT- IN என்ற குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, ஆண்ட்ராய்டு போன்களில் DRINIK என்ற புதிய வகை மால்வேர் ஊடுருவி பயனாளிகளின் வங்கி விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை திருடியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய பணக்காரர்களை குறி வைத்து இந்த சதி செயல் நடப்பதாகவும், வருமான வரித்துறையிடம் இருந்து வருகின்ற குறுந்தகவல் போன்று இந்த மோசடி வேலை நடந்து வருவது அம்பலமாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்