ராஜா ராணி சீரியலில் சந்தியாவும் சரவணனும் ஒரு வழியாக சேர்ந்து விடுகின்றனர். மேலும் அவர்கள் வீட்டிற்கு வர குடும்பமே அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்கிறது.
ராஜா ராணி 2
ராஜா ராணி சீரியலில் பஸ் விபத்துக்குள்ளாகிய நிலையில் சரவணன் சந்தியாவை பார்த்து விடுகிறார். சந்தியாவும் சரவணனை பார்த்ததும் ஓடி வருகிறார். என்னால் தானே உங்களுக்கு இவ்வளவு கஷ்டம் என்று கதறுகிறார் சரவணன். மேலும் உங்களுக்கு மட்டும் எதாவது ஆகி இருந்தா நான் உயிரோடவே இருந்து இருக்க மாட்டேன் என்று சொல்கிறார்.
இதனை கேட்டு சந்தியா பதறுகிறார். என் மேல இவ்வளவு ஆசையை வச்சுக்கிட்டு ஏன் இத்தனை நாள் மறைச்சிங்க என்று கேட்கிறார். மேலும் நான் உங்களை விட்டு பிரியணும்னு நெனச்சு இருந்தா எத்தனையோ சந்தர்ப்பத்துல நான் வீட்டை விட்டே போயிருப்பேன் என்று சொல்கிறார்.
அதற்கு சரவணன் அந்த விவாகரத்து பத்திரத்தை பற்றி சொல்கிறார். இப்பொழுது தான் சந்தியாவிற்கு விஷயமே புரிகிறது. அது தனது தோழி தான் எனக்கு தெரியாமல் வைத்ததாகவும், அதனை வைத்திருந்தது தான் என் தவறு என்றும் சொல்கிறார் சந்தியா.
இப்பொழுது தான் சரவணனுக்கு அனைத்து விஷயங்களும் புரிகிறது. இனி வாழ்க்கை முழுக்க உனக்காக தான் வாழ்வேன் என்று சொல்கிறார். இந்த சந்தோசத்துடனேயே வீட்டிற்கு செல்கின்றனர். இவர்களை பார்த்த பிறகு தான் சிவகாமிக்கு சந்தோசம் எழுகிறது.
ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்கின்றனர். அக்கம்பக்கத்தினர் சந்தியா போல மருமகள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்கின்றனர்.இதோடு எபிசோடு முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்