இந்த ஆண்டுக்கான கடைசி ஓபன் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று தொடங்கி நடைபெற உள்ளது.
நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்:
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என்று 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் இன்று, 30.08.2021 ல் அதாவது திங்கட்கிழமை தொடங்கி 12-ந் தேதி வரை நடக்க உள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இதுவரை ஏற்கனவே 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வாகை சூடிய நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் இங்கு அவர் பட்டம் வென்றால், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்துவார். தற்போது ஒலிம்பிக் சாம்பியனும், சமீபத்தில் சின்சினாட்டி ஓபனை வென்றவருமான ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஜெர்மனி, 2-ம் நிலை வீரர் மெட்விடேவ் (ரஷ்யா), சிட்சிபாஸ் (கிரீஸ்), பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்) ஆகியோர் ஜோகோவிச்சுக்கு கடும் போட்டியாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த போட்டி இவருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அத்துடன் 1969-ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு வீரரும் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் வென்றதில்லை. அந்த அரிய சாதனையை படைக்கும் வாய்ப்பும் ஜோகோவிச்சுக்கு உருவாகியுள்ளதால் இவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகி உள்ளது. முதல் நாள் ஆட்டங்கள் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்