பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் ஐஸ்வர்யா, முருகன் மாமா வீட்டில் தங்கி இருக்க இதனை கேள்விப்பட்ட தனம் நிம்மதியாக இருக்கிறார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஓரளவிற்கு மீண்டு வந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
முருகன் முல்லைக்கு கால் செய்து கண்ணனை அழைத்து வந்ததை பற்றி அனைத்தையும் சொல்கிறார். மேலும் முல்லை நான் தான் அவர்களை வரவழைத்ததாக சொல்ல வேண்டாம் என்று சொல்கிறார். இதற்கு முருகனும் ஒத்துக்கொள்கிறார்.
மேலும் முல்லை அவர்களுக்கு சாப்பாடும் போட சொல்கிறார். பார்வதி சமைத்து முடித்து முருகனை அழைக்கிறார். முருகனும் கண்ணனை அழைத்து சாப்பாடு போடுகிறார். அப்பொழுது பார்வதி 2 நாளு கொலை பசி போல என்று குத்தி காட்டுகிறார்.
மேலும் வீட்டுல செல்லம், வேளாவேளைக்கு சாப்பாடு ஆனாலும் உன்னால இருக்க முடியல என்று சொல்கிறார். கண்ணனுக்கு என்னவோ போல ஆகிறது. மேலும் ஐஸ்வர்யாவின் பாட்டி சொந்த ஊருக்கே அவமானம் தாங்காமல் சென்று விட்டதாக சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டார்ஸ் வீட்டில் தனம் சரியாக சாப்பிடாமல் இருக்க கண்ணன் எப்படி இருக்கிறானோ என்று கவலைப்படுகிறார். மேலும் முல்லை கண்ணன் தன் வீட்டில் இருக்கும் விஷயத்தை பற்றியும் சொல்லி விடுகிறார்.
அப்பொழுது தான் தனத்திற்கு நிம்மதியாக உள்ளது. மூர்த்தி, ஜீவா மற்றும் கதிர் வீட்டுக்கு வர கடையில் நல்ல வியாபாரம் என்று சொல்கின்றனர். மேலும் கடையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் சொல்கின்றனர். அப்பொழுது என்ன சாப்பாடு என்று சொல்ல முல்லை தான் சமைத்ததாக சொல்கிறார்.
அதற்கு முல்லை நன்றாக சமைப்பாளே என்று சொல்ல மீனா அப்போ அக்கா இத்தனை நாள் நல்லா சமைக்கலையா?? என்று கோர்த்து விடுகிறார். மூர்த்தி மாட்டிக்கொண்டோமே என்று முழிக்க குடும்பமே கலகலப்பாக சிரித்து பேச ஆரம்பிக்கின்றனர்.
மேலும் சாப்பிட போகும்போது தனம் பழக்க தோஷத்தில் கண்ணா சாப்பிட வாடா என்று அழைக்க அனைவரும் திகைத்து போகின்றனர். முல்லை கதிரிடம் கண்ணன் தன் வீட்டில் இருக்கும் விஷயத்தை பற்றி சொல்லி விடுகிறார். இதனால் ஓரளவிற்கு கதிர் நிம்மதியடைகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்