ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி அதிகாரத்திற்கு அஞ்சி வெளியேறும் 20,000 அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப் போவதாக இங்கிலாந்து நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற விரும்புகின்றனர். பெண்கள் தங்கள் சுதந்திரம் பறிக்கப்படக்கூடாது என்று அஞ்சி வீடுகளை விட்டு வெளியேறி போராட்டம் நடத்தி கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தற்போது உள்ள மோசமான சூழல் குறித்து உயர் அதிகாரிகளுடன் பிரிட்டன் உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் முடிவில் ஆப்கான் மக்களுக்கான மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் 20,000 அகதிகளுக்கு இங்கிலாந்தில் அடைக்கலம் அளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்திற்கு வரும் ஆப்கான் அகதிகளில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும். மேலும் ஆப்கானில் முகாமிட்டிருந்த இங்கிலாந்து படைகளுக்கு உதவிய மொழி ஆசிரியர்கள், பெயர்ப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்