இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 36,401 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 530 ஆக பதிவாகியுள்ளது.
உலக நாடுகளை கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் பரவி அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் 2 அலைகள் பரவி மக்களை பரிதவிக்க வைத்துவிட்டது. இரண்டாம் அலை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததால் குறைந்த தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் உயர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
தற்போது வரை இந்தியாவில் தொற்று பாதிப்பு 3.23 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.3 லட்சத்தை தாண்டி உள்ளது. இதில் நேற்று மட்டும் 36,401 பேர் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 530 பேர் இந்நோய் தொற்றால் இறந்துள்ளனர்.
நேற்று மட்டும் 39,157 பேர் கொரோனவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் தற்போது வரை நாட்டில் இந்நோய் தொற்றில் இருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 3,15,25,080 ஆக அதிகரித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்