விஜய் டிவியில் இரவு 8.30க்கு அளவில் பலவித எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. அந்த சீரியலில் பாக்கியாவின் உற்ற தோழியாகவும், கோபியின் முன்னாள் காதலியாகவும் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் தற்போது தன்னுடைய ரீல் கணவர் ராஜேஷ் உடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டு உள்ளார். அந்த புகைப்படத்தை நந்தன் ஷ்யாம் இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.
ஒரு குடும்பத்தில் நடைபெறும் சிறு சிறு சம்பவங்கள் திரையில் பிரதிபலிக்கும் ஒரு சீரியல் பாக்கியலட்சுமி. மேலும் இந்த சீரியலில் ஒரு இல்லத்தரசி தனது விருப்பு, வெறுப்புகளை எப்படி தன்னுடைய குடும்பத்திற்காக சமாளித்து செல்கிறார். மேலும் பல தடைகளை தாண்டி சாதிக்க துடிக்கும் ஒரு குடும்ப பெண்ணிற்கு வரும் பிரச்சனைகள் மற்றும் அவமானங்கள் மையமாக கொண்டு கதை நகர்கிறது.
மேலும் இந்த கதைக்கு மெருகேற்ற சில சில சுவாரசிய கதாபாத்திரங்கள் உள்ளனர். அதாவது பாக்கியாவின் கணவர் கோபியின் முன்னாள் காதலியை விதியின் சதியால் பாக்கியா மற்றும் கோபி இருவரும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்கின்றனர். பாக்கியா யார் என்று தெரியாமல் ராதிகாவும், ராதிகா யார் என்று தெரியாமல் பாக்கியாவும் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி வருகின்றனர். இவர்கள் இருவரின் இடையில் குளிர் காய்வது கோபி தான்.
இப்படி பல்வேறு உண்மைகள், திருப்பங்களை கொண்டதாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்யலக்ஷ்மி. இதில் கோபியின் முன்னாள் காதலியாக கணவனை பிரிந்து வாழும் பெண்ணாக நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா.அந்த சீரியல் அவரின் முன்னாள் கணவராக நந்தன் ஷ்யாம் என்பவர் ராஜேஷ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
புது காதலருடன் உல்லாசமாக இருக்கும் ஸ்ருதி ஹாசன்.. போதும்.. போதும்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது!!
தற்போது நந்தன் ஷ்யாம் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரேஷ்மா தன் மேல் கை போட்டு கொண்டு எடுத்த செல்பி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்