கேரளாவில் டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவினால் ஜிகா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக அம்மாநிலத்தில் அதிகரித்து வருகிறது.
கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வரும் வேளையில் அடுத்த தலைவலியாக ஜிகா வைரஸ் உருவாகியுள்ளது. தற்போது கேரளாவில் 19 பேர் வரை இந்த ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிகா வைரஸ் முதன் முதலில் கேரளாவில் ஒரு கர்ப்பிணிக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இந்நோய்யின் பாதிப்பு எண்ணிக்கை அங்கு கூடிக்கொண்டு வருகிறது.
இதனால் மத்திய அரசின் மருத்துவ நிபுணர் குழு திருவனந்தபுரத்திற்கு விரைந்துள்ளது.மத்திய நிபுணர் குழுவின் அறிக்கையை அடுத்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்பும் சராசரியாக கேரளாவில் தினசரி 10 ஆயிரமாக உள்ளது.
கேரளா அண்டை மாநிலம் என்பதால் தமிழக சுகாதாரத் துறை, தமிழக கேரள எல்லையில் தீவிர கண்காணிப்புப் பணிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் ஜிகா வைரஸ் சோதனைக்கான பலவித ஏற்பாடுகளையும் தமிழக சுகாதாரத் துறை செய்து வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்