சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து வரும் கேபிரியாலா தனது கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
‘சுந்தரி’ சீரியல் கேபிரியாலா
சன் டிவியில் சுந்தரி சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேபிரியாலா தான் இதில் நடித்து வருகிறார். கருப்பாக இருக்கும் சுந்தரியை கார்த்திக்கிற்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கின்றனர்.
தனது மாமா மீது உள்ள மரியாதையில் வேறு வழியில்லாமல் சுந்தரியை திருமணம் செய்துகொள்கிறார். சென்னையில் அணுவை காதலித்து வரும் கார்த்திக் அவரையும் திருமணம் செய்துகொள்கிறார். ஒரே சமயத்தில் சுந்தரியையும் அணுவையும் சேர்ந்து ஏமாற்றி வரும் கார்த்திக் யாரிடமும் முதலில் சிக்க போகிறார் என்று தெரியவில்லை.
இந்த சீரியலில் சுந்தரி கதாபாத்திரம் எப்படி என்றால் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று கனவோடு வாழ்பவள். தனது அம்மாவின் கட்டாயத்தால் திருமணம் செய்ய ஒத்து கொள்கிறார். இந்த சீரியலில் தனது தேர்ந்த நடிப்பால் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார் கேபி.
மேலும் இன்ஸ்ட்டாவில் தொடர்ந்து தனது திறமைகளை காட்டிக்கொண்டே தான் உள்ளார். இந்நிலையில் தனது கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு ‘என்னவர்’ என் கணவர் என்று மென்ஷன் செய்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamடர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்