தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சென்னையில் கொரோனா பாதித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் குணமடைந்து இருப்பது மக்களுக்கு நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. தமிழக டாக்டர்களின் இந்த சாதனையை அனைவரும் பாராட்டி உள்ளனர்.
இன்று டிஸ்சார்ஜ்:
சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 84 வயது மூதாட்டி, 54 வயது பெண் மற்றும் 25 வயது இளைஞர் ஆகியோர் அடங்குவர். அவர்கள் மூவரும் பாதிப்பில் இருந்து முழுவதும் குணமடைந்து உள்ளனர். அவர்களுக்கு இரண்டு முறை நடைபெற்ற சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானதை தொடர்ந்து அவர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள நகரம் சென்னை தான். அங்குள்ள ராஜாஜி மருத்துவமனையில் ஏற்கனவே 74 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியதும் குறிப்பிடத்தக்கது. இது கொரோனா பாதித்து தற்போது சிகிச்சை பெற்று வரும் பலருக்கும் நம்பிக்கை அளிக்கும்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |