இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டி, 5 டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை பங்கேற்க உள்ளது. முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. அதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியும் சென்னையில் வைத்தும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியும் அகமதாபாத்தில் வைத்தும் நடக்க உள்ளது. வரும் 5ம் தேதி முதல் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் சில நாட்களுக்கு முன்பாகவே சென்னை வந்தடைந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை வந்த இரு அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்ததால் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா தொடரில் விலகிய விராட் கோஹ்லி தற்போது அணிக்கு திரும்பியுள்ளார். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
பிப்ரவரி 7 இல் தமிழகத்திற்கு வருகை தரும் சசிகலா – டிடிவி தினகரன் அறிவிப்பு!!
இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல் டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கு தடை விதித்துள்ளனர். ஆனால் வரும் 13ம் தேதி துவங்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு சென்னை மைதானத்தில் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.