கொரோனா பரவல் காரணமாக பலவற்றை இழந்து வந்துள்ளோம். வரப்போகும் 3வது அலையில் இருந்து அனைவரும் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மற்றும் கொரோன 3வது அலை பற்றியும் மக்களுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது.
மதுரைகிளை உச்சநீதிமன்றம் அறிவுரை!!!
கொரோனா பரவலால் உலகமே சீரழிந்து வருகிறது. இந்த நோய் தொற்றால் பல உயிர்களை பறி கொடுத்தோம். கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து இந்த நோய் பரவ ஆரம்பித்தது. நோயின் தாக்கம் இன்னும் குறைந்தபாடு இல்லை. கொரோன 1வது அலையில் கொரோனா என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தோம். பின் அதனைப்பற்றி தெரிந்துகொண்டு பாதுகாப்பாக இருந்து வந்தோம். அதன் பின் 2வது அலை என்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோனா முதல் அலையை விட 2வது அலையில் பாதிப்பும் உயிர் பலிகளும் அதிகமாகின.
இந்த நோயால் இதுவரை நம் நாட்டில் மட்டும் 3 கோடி பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தோற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 2வது இடத்திலும். உயிர் பலிகள் அதிகம் ஆன் நாடுகளில் இந்தியா 3வது இடத்திலும் இருக்கிறது. எனவே வரப்போகும் 3வது அலையில் இருந்து மக்கள் மிக கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் முகக்கவசம், கிருமி நாசினி, சமூக இடைவெளி மற்றும் அரசின் விதிமுறைகள் கட்டுப்பாடுகளை பின்பற்றி நடக்க வேண்டும். அப்படி பின்பற்றாமல் விதிமுறைகளை மீறுவோர் மீது கடின நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரைகிளை உச்சநீதிமன்றம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்