பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) நாடு முழுவதும் உள்ள 24 அங்கீகரிக்கப்படாத உயர் கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அவை போலியானவை எனக் கூறிய யுஜிசி, உத்திரப் பிரதேச மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாக அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டு உள்ளது.
போலி பல்கலைக்கழகங்கள்:
யுஜிசி சட்டத்திற்கு புறம்பாக தற்போது 24 சுய, அங்கீகரிக்கப்படாத உயர் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அவை போலி பல்கலைக்கழகங்கள் என எச்சரிக்கப்படுகிறது. மேலும் அவை எந்த பட்டத்தையும் வழங்க அதிகாரம் இல்லை என்று யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கூறினார். அதுமட்டுமின்றி அந்த பல்கலைக்கழகங்களில் பெறப்படும் பட்டங்கள் செல்லாது எனவே மாணவர்கள் கவனமுடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
யுஜிசி வெளியிட்டு உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலில் அதிகபட்சமாக எட்டு பல்கலைக்கழகங்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை, டெல்லியில் ஏழு, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் தலா இரண்டு உள்ளன. அவற்றின் முழு பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.