தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் பணமும் வழங்கி வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது தமிழக அரசு இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது இந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் வசிக்கும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 2.19 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு ரூபாய் 238.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் பணமும் வழங்குவதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.