தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விரைவில் தேர்வுகளை முடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு தற்போது 12 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் தற்போது தமிழகத்தில் இன்புளுயன்சா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 1 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வுகளை நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடத்தல் தங்கம் பறிமுதலில் தமிழ்நாடு 2ம் இடம்., ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள பட்டியல்!!!
அதாவது ஏப்ரல் 24 ஆம் தேதி நடக்க இருந்த தேர்வை, அதற்கு முன்னதாக 17 ஆம் தேதியே தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தமிழகத்தில் பரவும் வைரஸால் தான் இப்படி திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.