நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மத்திய அரசு இதுவரை PM கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூபாய் 6000 வீதம் மூன்று தவணையாக ரூபாய் 2000 வழங்கி வருகின்றனர். அதன்படி தற்போது வரை விவசாயிகளுக்கு 15 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 16 வது தவணை (பிப்ரவரி 28) நேற்று வழங்கப்படும் என தகவல்கள் வெளியானது. இந்த தகவலின் படி நேற்று 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 16 வது தவணை வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில் விவசாயிகள் அனைவரும் 16 வது தவணை வங்கி கணக்கில் ஏறி விட்டதா என்பதை உடனடியாக சரி பார்த்து கொள்ள வேண்டும். ஒரு வேலை இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை உடனடியாக 155261 அல்லது 1800115526 அல்லது 011-23381092 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெளிவான விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளனர்.