நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வரும் மார்ச் மாத இடைவெளியில் அறிவிக்கப்படலாம் எனவும் கூறி வருகின்றனர்.
PM கிசான் திட்டத்தின் 16 வது தவணை.., உடனே இத செக் பண்ணுங்க.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
இது மட்டுமல்லாமல் மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான ஃபிட்மென்ட் காரணி 2.57லிருந்து 3.00 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. மேலும் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்ட கூடும் என்பதால், வீட்டு வாடகைப் படியிலும் (HRA) உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 1 கோடிக்கும் மேலான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைய இருப்பதால், தேர்தலுக்கு முன்னதாகவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.