முழு நேரமும் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான கோவையை சேர்ந்த 16 வயது சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டிற்கு அடிமை:
கோவையை சேர்ந்த கந்தவேல் – ராம்பிரபா தம்பதியின் 16 வயது மகன் அருண். தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அருண் ஆன்லைன் விளையாட்டான பப்ஜி கேமிற்கு அடிமையாகியுள்ளார். அடிக்கடி அவர் வெளியாகி அதிலேயே மூழ்கி போய் உள்ளார். இதனால் அவரது பெற்றோர் அவரை கடுமையாக கண்டித்துள்ளனர். ஆனால், அதனை பொருட்படுத்தாத அருண் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கூடுதலாக, பொது முடக்கம் வேறு அமல்படுத்தப்பட்டதால் அவருக்கு மிகவும் வசதியாக போய் உள்ளது. பின், பப்ஜி விளையாட்டிற்கு தடை வந்ததும் அவரால் அதனை தாங்கி கொள்ள இயலவில்லை. மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளான அருண் அதில் இருந்து மீண்டு வர மிகவும் சிரமம் அடைந்துள்ளார். அவரது நிலையினை பார்த்த பெற்றோர் பயந்து போய் வரை மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்றுள்ளனர்.
சிறுவன் மரணம்:
அருணிற்கு சிறு வயதில் இருந்தே செல்ல பிராணிகள் என்றால் பிரியம் என்ற காரணத்தால் அவரை இவர்களது சொந்த பண்ணை வீட்டில் குடும்பத்தினர் இருந்துள்ளனர். அவர் இங்கு முன்று மாதங்கள் தங்கியுள்ளார். அவர் நன்றாக தான் இருந்துள்ளார் என்று நினைத்த நிலையில் நேற்று இரவு பெற்றோர் வீட்டில் இல்லாத சமயம் தனியாக இருந்த அருண் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
வெளியே சென்று விட்டு திரும்பி வந்த பெற்றோர் அருண் இருந்த நிலையினை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மருத்துவமனையில் அனுமதியுள்ளனர். ஆனால், அதற்கு முன்பாகவே அவர் மரணம் அடைந்து விட்டார். அவரது உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தலைப்புச் செய்திகளின் சுருக்கம் – மறக்காம படிங்க!!
ஆன்லைன் விளையாட்டு மோகம் வளரும் பருவத்தினரை அதிகமாக பாதித்துள்ளது இதன் மூலமாக தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்பவர்களுக்கு அது ஒரு நிமிட வலி ஆனால் அவர்களை நேசித்தவர்களுக்கு அது வாழ்நாள் முழுவதும் வலி. அருணின் குடும்பத்தினர் தற்போது மிகுந்த வேதனையில் உள்ளனர்.