கொரோனா பரவல் எதிரொலி – வைத்தீஸ்வரர் கோவில் திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!!

0

கொரோனா பரவல் எதிரொலி காரணமாக மயிலாடுதுறையில் உள்ள வைத்தீஸ்வரர் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே போல் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வைத்தீஸ்வரன் கோவில்

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய்த்தொற்று மக்களை மிக கடுமையாக பாதித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பல்வேறு கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் தற்போது வீசப்படும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பல்வேறு கட்ட கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமல்லாமல் கோவில் போன்ற மதசார்ந்த விழாவிற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மயிலாடுதுறையில் மக்கள் அனைவரும் மிக சிறப்பு மிக்க வழிபாட்டு தலமாக கருதுவது தான் வைத்தீஸ்வரர் கோவில். இந்த கோவிலில் தற்போது குடமுழுக்கு திருவிழா நடைபெறவுள்ளது. இதில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பினர் கூறி வந்தனர்.

தமிழகத்தில் முதற்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசி – தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!!

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பக்தர்கள் வருகையை தடுக்கும் வகையில் நாளை மயிலாடுதுறையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here