விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் தற்போது காதம்பரி சத்யாவின் அம்மாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு வருகிறார்.
மௌன ராகம்
மௌன ராகம் சீரியலில் தற்போது சக்தி விடியோவை பார்த்து காதம்பரிக்கு சந்தேகமாகிறது. ஒருவேளை மல்லிகா மீண்டும் வந்து விட்டாரோ என்று நினைக்கிறார். இதனை தன் அம்மாவிடம் சொல்ல அவர் நம்புவதாக இல்லை. அடுத்து சக்தியின் விடியோவை பார்த்து 1 லட்சம் வரை வந்துள்ளதால் சந்தோஷமடைகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அடுத்து வருணுக்கு அவரது அப்பா மனோகர் பெண் பார்க்கும் வேலையில் ஈடுபடுகிறார். பெண் வீட்டில் இருந்து அனைவரும் வர ஷீலா வருணுக்கு இருக்கும் பிரச்னையை உளறி விடுகிறார். இதனால் வருணை கேவலமாக பேசிவிட்டு வெளியே செல்கின்றனர்.
இதனால் வருண் மேலும் கோவமடைகிறார். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அடுத்ததாக காதம்பரி ஹாஸ்பிடலுக்கு வருகிறார். இதனை சக்தி பார்த்து விட தன்னை பற்றி கேட்டால் எதுவும் சொல்ல வேண்டாம் என்று நர்ஸிடம் கெஞ்சுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.
கொரோனா பரவல் எதிரொலி – வைத்தீஸ்வரர் கோவில் திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!!
அதாவது கோவித்துக்கொண்டு வெளியே செல்லும் வருண் வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்பொழுது தான் சக்தி வந்து காப்பற்றுகிறார். வருணிடம் சக்தி அனுசரணையாக பேசுவதை பார்த்து மனோகருக்கு சக்தியை திருமணம் செய்து வைக்கலாம் என்ற எண்ணம் வர வாய்ப்புள்ளது. அப்படி என்றால் சக்திக்கு ஜோடி வரும் தான் என்பது உறுதியாகியுள்ளது. அப்போ தருணின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.