“பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ஜோடி தான் பாலாஜி மற்றும் ஷிவானி ஜோடி. ஷிவானி தற்போது பாலாஜியிடம் தனது அம்மா திட்டியதற்கு மன்னிப்பு வேண்டி உள்ளார். இதனை அடுத்து அந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி நாராயணன்
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் “பிக் பாஸ்”. இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 4 வது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் முடிவடைந்தது. கடந்த சீசன் யாரும் எண்ணமுடியாத அளவிற்கு இருந்தது என்று தான் கூற வேண்டும். அந்த வீட்டில் இருந்த அனைவருமே எதாவது ஒரு காரணத்தை வைத்து தொடர்ந்து சண்டை போட்டு வந்தனர்.
அதில் குறிப்பிடும்படி இருந்தவர்கள் தான் ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி. இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக தான் இருந்து வந்தனர். ஆனால், நாட்கள் ஆக ஆக இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் ஷிவானி சரிவர போட்டிகளில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். இதனால் அனைவருமே ஷிவானியை வெறுத்து வந்தனர். பின், ஷிவானியின் அம்மா பிரீஸ் டாஸ்கின் போது ஷிவானியை நன்றாக திட்டி விட்டார். இது பாலாஜிக்கு என்னவோ போல் ஆகி விட்டது. இதனால் இருவரும் விலகி தங்களது போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பின், அந்த நிகழ்ச்சி முடிந்த பின்பும் கூட இருவரும் அவ்வளவாக பேசி கொள்ளவில்லை. தற்போது சமீப நாட்களாக தான் இருவரும் பேசி வருகின்றனர். இதனை அடுத்து தற்போது ஷிவானி மற்றும் பாலாஜி இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் செய்துள்ளனர். அதில் ஷிவானி “நீ வீட்டுக்கு வந்த அப்ப, எங்க அம்மா உனைய கேவலமாக திட்டுச்சி, கொஞ்சம் கேவலமா வேற பேசுச்சு, அதல்லாம் மனசுல வெச்சுகாதா” என்று சொல்ல அதற்கு பாலாஜி “இதல்லாம் பாத்த முடியுமா, விடு பாத்துக்கலாம்” என்று பதில் கூறுகிறார். இதனை அடுத்து இந்த ரீல்ஸ் உங்கள் இருவருக்கும் சரியானது தான் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.