வருமான வரித்துறையினரின் பேன் கார்டினை ஆதார் கார்டுடன் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்கவிட்டால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இ – பேன் கார்டு..!
மத்திய பட்ஜெட் அறிவிப்பின்படி இந்த ஆண்டில் ஆன்லைனில் எந்தவித விண்ணப்பமும் இல்லாமல் ஆதார் எண்ணை மட்டும் பயன்படுத்தி இ – பேன் கார்டு பெரும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பேன் கார்டு பெரும் முறை மேலும் எளிதாகும் என கூறப்படுகிறது.
10 ஆயிரம் அபராதம்..!
வருமானவரித்துறை ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின் படி மார்ச் 31க்குள் பேன் கார்டுடன், ஆதார் கார்டை இணைக்காவிட்டால் அந்த கார்டினை பயன்படுத்த முடியாது எனக் கூறி இருந்தது. தற்போது வெளியிட்ட அறிவிக்கையின் படி செயல்படாத பேன் கார்டுகளை பயன்படுத்த 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக பெறப்படும் என கூறப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |