இரண்டாவது சீசனுக்கு தயாரான இரண்டு மெகா சீரியல்கள் – மகிழ்ச்சியில் திளைத்த ரசிகர்கள்!!

0

பிரபல ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இரண்டு சீரியல்களின் அடுத்த கட்ட நகர்வான இரண்டாவது சீசன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்ட நகர்வில் சீரியல்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் என்றால் அதற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.  இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல புத்தம் புது சீரியல்கள் புதிதாக களம் இறக்கப்பட்டது.  இந்த சீரியல்களில் பல தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்தன.

இந்த நிலையில், இந்த டிவியில் ஒளிபரப்பான சத்யா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தொடர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட்டு சீரியலை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து, தற்போது இந்த சீரியலின் இரண்டாவது சீசன் வருகிற 25ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாவதாக தகவல் வந்துள்ளது.  இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here