ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பரபரப்பாக பேசப்படும் சர்வைவர் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட் மிகவும் கலவரத்துடன் முடிந்துள்ளது.
கலவர பூமியாக மாறிய சர்வைவர்:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று சர்வைவர். பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த இந்த ஷோவில் தற்போது புயல் வீச ஆரம்பித்துள்ளது. நேற்றைய ரிவார்ட் டாஸ்கில் ஐஸ்வர்யா தலைமையிலான வேடர்கள் அணி தோல்வியுற்றது. இதனால், இவர்களுக்கு கிடைக்க வேண்டிய அட்வான்டேஜ் கிடைக்காமல் கை நழுவி போனதாக மட்டுமே அவர்கள் நினைத்தனர்.
ஆனால், அதன் உரிமையாளரான சர்வைவர் இந்த அணியின் தலைவரும், தோல்விக்கு காரணமான நபரும் 24 மணி நேரம் கை விலங்குடன் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத வேடர்கள் அணியை சேர்ந்த நந்தா இது மனித உரிமை மீறல் என்று சொல்லி இந்த நிகழ்ச்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதை அடுத்து, இதன் தொகுப்பாளரான அர்ஜுன், போட்டி என்றால் எல்லாம் தான் இருக்கும், இஷ்டமில்லை என்றால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுங்கள் என்று கோபமாக பேசியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்