யூடியூபர் ஒருவர் ஸ்போர்ட்ஸ் பிளேயராக இருந்து வந்துள்ளார். அவர் ஒரு யூடியூபர் என்பதால் தான் அன்றாட வாழ்க்கையில் என்ன என்ன நடக்கிறதோ அதையெல்லாம் கேமரா மூலமாக பதிவு செய்து அதை யூடியூபில் அப்லோட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதற்காக அவர் வீட்டின் படுக்கையறை ரூம் முதல் எல்லா இடங்களிலும் கேமரா பொருத்தியுள்ளார்.
இந்நிலையில் இவருடைய படுக்கையறை ரூமில் உள்ள கேமராவை ஹேக் செய்து அந்த யூடியூபரின் ஆடை இல்லாத வீடியோவை இணையத்தில் மர்ம நபர்கள் வெளியீட்டு உள்ளனர். இதை பார்த்த யூடியூபர் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்ட நிலையில் இந்த வேலையை யார் செய்தார் என்பதை காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.