தமிழக பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டம்…, அதிகாரப்பூர்வமாக இன்று தொடக்கம்!!

0
தமிழக பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டம்..., அதிகாரப்பூர்வமாக இன்று தொடக்கம்!!
தமிழக முதல்வர், பெண்களும் தங்களது வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம், உரிமை தொகை என இதன் வரிசையில், தனி நபர்கள் மற்றும் பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி உள்ளார்.
அதாவது, ஆடு வளர்ப்பு, பால் பண்ணை, பட்டு நெசவு, அழகு நிலையம், தையல் தொழில், பலசரக்கு கடை, உணவகம், தேங்காய் மற்றும் காய்கறி வியாபாரம் உள்ளிட்ட தொழில்களை மேற்கொள்வதற்காக  100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடன் வழங்கும் திட்டத்தினை இன்று (டிசம்பர் 15) தொடங்கி வைத்துள்ளார். ஒருவருக்கு ரூ.15 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன் உதவி இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here