தமிழக அரசானது, கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000-ஐ வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டு வரும் இந்த மகளிர் உரிமை தொகை டிசம்பர் மாதத்தில் நேற்று (டிசம்பர் 14) வரையிலும் பயனர்களின் வங்கியில் வரவு வைக்கப்படவில்லை.
சுமார் 1 கோடியே 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் நிலையில், தமிழகத்தின் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட உள்ளதால் இம்மாதம் உரிமை தொகை பெற தாமதமாகும் என முன்னரே தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், டிசம்பர் மாத உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக பரவலான தகவல் வெளியாகி உள்ளது. இதனால், திட்டத்தின் பயனாளர்கள் தங்களது வங்கி கணக்கை செக் செய்துகொள்ளுங்கள்.
Enewz Tamil WhatsApp Channel
ரயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்த பணம் வேண்டுமா? அப்போ கண்டிப்பா இத செய்யணும்?