சோசியல் மீடியா மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் ஒருவர் தான் பிரபல யூடியூபரான இர்பான். இவர் தனியாக ‘இர்பான் வியூஸ்’ எனும் யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர், உணவகங்களில் உள்ள உணவுகளை Review செய்வதன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் ரீச்சானார். சமீபத்தில் அவருக்கு ஆசிபா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில், தனது மாமாவுடன் செங்கல்பட்டு அருகே காரில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில் அவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அவரின் கார் மட்டும் அதிகமாக சேதமடைந்தது. இந்த விபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் புத்தேரி அருகே உள்ள கோனாதி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இர்பானின் காரை பறிமுதல் செய்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் பரிசோதனைக்காக செங்கல்பட்டு ஆர்டிஓ ஆபிஸில் ஆஜர்படுத்தினர். ஆனால் அந்த சமயத்தில் இர்பானுக்கு எதிராக கூடுவாஞ்சேரி போலீசார் உரிய ஆவணங்களை ஆர்டிஓ அலுவலகத்தில் கொடுக்காததால் அதிகாரிகள் காரை திருப்பி அனுப்பியுள்ளனர்.
மாணவர்களே.., நாளை முதல் பள்ளிகள் இயங்கும்…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தற்போது அந்த காரானது மீண்டும் காவல் நிலையத்திற்கே வந்துவிட்டது. இந்நிலையில் இர்பான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை வெளியிட்டுள்ளார். அதாவது இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எனக்கு சப்போர்ட்டாக இருந்த எல்லாருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். தற்போது அந்த இன்ஸ்டா ஸ்டோரி வைரலாக பரவி வருகிறது.