இந்தியாவில் நிலவி வரும் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக, பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு முன்கூட்டியே 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த கோடை விடுமுறையானது பெரும்பாலான பள்ளிகளில் மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய கல்வி ஆண்டை மாணவர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த மாதம் ஏப்ரல் 12ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்றுடன் (மே 30) இந்த கோடை விடுமுறை முடிவடைய உள்ளதால், நேற்றில் இருந்தே வருகைப்பதிவு கணக்கீடு மற்றும் சீருடை, புத்தகங்கள் வழங்குவதற்காக மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்துள்ளனர்.
இதன்படி, பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள் புதிய (2023-2024) கல்வி ஆண்டுக்கான சீருடை, புத்தகங்கள் புத்துணர்ச்சியுடன் பெற்றுச் சென்றதாக அகாரா அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிக்கதேவகவுடா கூறியுள்ளார். மேலும், அதிகாரப்பூர்வமாக நாளை (மே 31) முதல் பெங்களூரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.