இந்திய தலைநகர் டெல்லி, நொய்டா அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு (ஜூன் 3, 2020) 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க இதுபோன்ற இயற்கை பேரிடர்களும் மக்களை வாட்டி வதைத்து வருகின்றன.
நில நடுக்கம்:
நேற்றிரவு 10:42 மணிக்கு ஹரியானாவுக்கு கிழக்கே 17 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.0 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய மையம் கூறியுள்ளது. இதனால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மே 29 அன்று, ரிக்டர் அளவில் 4.6 ரிக்டர் அளவிலான லேசான தீவிர நிலநடுக்கம் கிழக்கு ஹரியானா மற்றும் டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (என்.சி.ஆர்) சில பகுதிகளை இரவு 9.08 மணிக்கு தாக்கியது.
கடந்த ஒரு மாதத்தில் டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகள் குறைந்தது 6-7 பூகம்பங்களை சந்தித்துள்ளன. கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் முடியாத நிலையில் புயல், நிலநடுக்கம் என வரிசையாக இயற்கைப் பேரிடர்கள் இந்தியாவை தாக்கி வருகின்றன.
நிபுணர்களின் கருத்துப்படி, டெல்லியில் சிறிய நிலநடுக்கம் உள்ளது, அவை ரிக்டர் அளவில் 3-4 தரமாக உள்ளன. இருப்பினும், ரிக்டர் அளவில் பூகம்ப அளவு 4 க்கு மேல் இருக்கும்போது, குறிப்பாக வீடுகள் வலுவாக கட்டப்படாத பகுதிகளில் ஆபத்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |