ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் கொடிகட்டி பறக்கும் ஜியோமி நிறுவனம் தற்போது ஆட்டோமொபைல் துறையிலும் கால் பதித்து உள்ளது. மலிவு விலையில் மின்சார மொபெட்டுகளை இந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
மொபெட்டின் சிறப்பம்சங்கள்:
நகர பயன்பாட்டை அடிப்படையாக கொண்டு இந்த மொபெட் ஏ1 மற்றும் ஏ1 ப்ரோ ஆகிய இரு வேரியண்ட்டுகளில் மின்சார மொபெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. முதன்முறையாக சீனாவில் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள இது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகச் சிறிய வடிவத்தில் இது உருவாக்கப்பட்டு உள்ளது.
மின் மோட்டார் – 750 வாட் திறன்
சக்கரங்கள் – அதிகபட்சமாக 16 இன்ச் வீல்கள்
அதிகபட்ச வேகம் – 25 கிமீ
ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மொபெட்டில் வேண்டுயமானால், மற்றொருவர் அமரும் வகையில் கேரியரை ஃபிட் செய்து கொள்ளலாம்.
இரு வேரியண்ட்டுகள்..!
- ஏ 1 – 768Wh திறனுடைய லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 60 கிமீ மைலேஜை வழங்கும்.
- ஏ 1 ப்ரோ – உயர் திறன் கொண்ட 960Wh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 70 கிமீ தூரம் வரை செல்லும்.
இதில் பயணம் செய்யும் போது சார்ஜ் தீர்ந்து விட்டால் அதிலுள்ள பெடலை பயன்படுத்தி நிறுத்தாமல் போய்க் கொண்டே இருக்கலாம். இந்த மொபெட் பேட்டரியை தனியாக கழட்டி சார்ஜ் செய்து கொள்ளலாம்.
கவர்ச்சிகரமான வசதிகள்:
டிஎஃப்டி கலர் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்இடி மின் விளக்கு, தொடுதிரை மற்றும் வாய்ஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் இதில் உள்ளன. இத்துடன் உயர் தரத்தில் காட்சிகளைப் பதிவு செய்யும் கேமிராவும் இதில் உள்ளது. இதன் விலை ரூ. 31,633 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |