கத்தாரில் 22 வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20 முதல் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று குரூப் G பிரிவில் கேமரூன் மற்றும் செர்பியா அணிகள் மோதியது. இதில் கேமரூன் ஸ்விட்சர்லாந்திடம் முதல் ஆட்டத்தில் 0-1 என கோல் எதுவும் இல்லாமல் தோல்வி அடைந்தது. அதேபோல் செர்பியா அணி பிரேசிலிடம் 0-2 என கோல் எதுவும் இல்லாமல் தோல்வி அடைந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதனால் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் போட்டியை தொடங்கியது. விறுவிறுப்பான ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் காஸ்டெலோடோ கேமரூன் வீரர் முதல் கோலை பதிவு செய்தார். பின்னர் செர்பியா வீரர்கள் பாவ்லோவிக் 46 வது நிமிடத்திலும், 48வது நிமிடத்தில் சாவிக்கும் தலா ஒரு கோல் அடிக்க ஆட்டத்தின் முதல் பகுதியில் 2-1 என செர்பியா முன்னிலையில் இருந்தது.
அப்பவே நடிகர் திலகத்தை நேருக்கு நேர் கேள்வி கேட்ட உலகநாயகன்.., வெளிவந்த உண்மை சம்பவம்!!
இரண்டாம் பகுதியில் 53 வது நிமிடத்தில் செர்பியாவின் மிட்ரோவிக் ஒரு கோல் அடிக்க செர்பியா முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து மனம் தளராத கேமரூன் வீரர்கள் அபூபக்கர் 63 வது நிமிடத்திலும், மாக்சிம் 66வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடிக்க ஆட்டத்தை விறுவிறுப்பாகியது. பின்னர் இரு அணி வீரர்களும் போராடி கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டம் 3-3 என சமன் ஆனது. இதனால் இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.