தமிழக அரசு ஊழியர்களுக்கு இதுவரை அகவிலைப்படி வழங்கப்படாததை கண்டித்து, போராட்டம் நடத்தி வரும் நிலையில், முக்கிய கோரிக்கை ஒன்றை முதல்வருக்கு அனுப்பியுள்ளனர்.
முதல்வரிடம் கோரிக்கை:
அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை ஊதிய உயர்வு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த தீபாவளி பண்டிகையின் போது, 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அரசின் இந்த அறிவிப்பை அடுத்து பல மாநில அரசுகள், தங்கள் மாநில ஊழியர்களுக்கு அகவிலைப்படியை வழங்கியது. ஆனால் தமிழகத்தில், கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இந்த தொகை வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி வரப்படுகிறது. இதனால் சேலம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், அரசுக்கு எதிராக கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அரசுக்கு இது குறித்த முக்கிய கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர்.
திக் திக் ஆட்டம் சமனானது.., கேமரூன் vs செர்பியா., உலக கோப்பை கால்பந்து!!
அதாவது கடந்த 17 மாதங்களாக இதுவரை வழங்கப்படாமல் இருக்கும் நிலுவைத் தொகையையும், கிடப்பில் போடப்பட்டுள்ள அகவிலைப்படி ஊதிய தொகையையும் விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வரும் பொங்கல் பண்டிகைக்காவது தங்களுக்கு இந்த நற்செய்தி கிடைக்க வேண்டும் எனவும், இனிமேலும் தங்களை ஏமாற்ற வேண்டாம் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.