தமிழகத்தில் கனமழை காரணமாக, குறிப்பிட்ட சில மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
கனமழை விடுமுறை :
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக, மாணவர்களை ஆசிரியர்கள் தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக, வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில், கனமழை காரணமாக இன்று விருதுநகர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுபோக, தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில், நீலகிரி, கோவை, ஈரோடு, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் தேனி ஆகிய 9 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.