உலக கோப்பை கால்பந்தில் ரொனால்டோ உள்ள அணியுடன் இந்தியாவின் மிகவும் பிரபலமான நிறுவனம் ஒன்று ஸ்பான்சராக கைகோர்த்துள்ளது.
உலக கோப்பை கால்பந்து:
கால்பந்து ரசிகர்கள் அனைவரும் கத்தாரில் வரும் 20ம் தேதி முதல் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடருக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, இந்தியாவின் கேரளா மாநிலத்தில், கால்பந்து நட்சத்திர வீரர்களான, ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி மற்றும் நெய்மருக்கு கட்அவுட்கள் வைத்திருந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
உலக கோப்பை கால்பந்துக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உணர்ந்த பல ஸ்பான்சர்கள், நட்சத்திர வீரர்கள் உள்ள அணியுடன் கைகோர்த்து வருகின்றன. இந்த வகையில், இந்தியாவில் மிகவும் பிரபலமான அமுல் நிறுவனமானது, ரொனால்டோ உள்ள போர்ச்சுகல் அணியுடன் அடுத்த வருடம் வரை ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ச்சீ.., என்ன மாதிரி ஆம்பள நீ.., குணசேகரனை கழுவி ஊற்றிய குந்தவை.., கூனிக்குறுகி போன மொத்த குடும்பம்!!
இந்தியாவை மையமாக கொண்டு, பால் சம்பந்தப்பட்ட உணவு வகைகளை தயாரிக்கும் இந்த அமுல் நிறுவனமானது, கத்தாரில் நடைபெற இருக்கும் உலக கோப்பைக்கான அணியுடன் கைகோர்த்துள்ளது, இந்தியாவுக்கு ஒரு பெருமையாக தான் பார்க்கப்படுகிறது.