சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது குந்தவை சரியான முடிவை எடுத்து குணசேகரன் முகத்தில் கரியை பூசிவிட்டார். சனிக்கிழமை எபிசோடில் ஜனனி கடைசி நேரத்தில் வந்து தாலி கட்டுவதை தடுத்து நிறுத்தினார். நான் சக்தியுடைய மனைவி என்றும், இந்த வீட்டில் பெண்களை அடிமையாக வைத்திருப்பதையும் சுட்டி காட்டினார்.
இதுக்கு மேல இந்த கல்யாணம் நடக்குறதும், நடக்காததும் உங்க இஷ்டம் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் ஜனனி. இதோடு நேற்றைய எபிசோடு முடிவடைந்தது. அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். அந்த ஆவலுக்கு எந்த ஒரு பங்கமும் இல்லாத வண்ணம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது குணசேகரன் வாம்மா கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும் என்று சொல்ல குந்தவைக்கு கோவம் தலைக்கு மேல் வருகிறது. சரியான ஆம்பளையா இருந்தா உண்மையை சொல்லி தானே கல்யாணம் பண்ணனும் என்று கத்துகிறார் குந்தவை. இதற்கு கதிர் வந்து எகிற அவரையும் அடக்குகிறார் குந்தவை. இனிமேல் தான் தரமான சம்பவமே காத்திருக்கிறது. இன்றைய எபிசோடுகாக பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.